21 Apr 2010

காலம்…!
















கால வெள்ளத்தில்
தினம் தினம் உனை
காண முடியாமல் போகலாம்…
உள்ளத்து உணர்வை
உறைக்க முடியாமல் போகலாம்…
அழத்தோன்றுகையில்
உனை அன்றி உன் நினைவுகளே
ஆறுதலாய் ஆகலாம்…
அன்பை வெளிக்காட்ட
உனை நினைத்த நேரத்தில்
அழைக்க முடியாமல் போகலாம்…!
ஆனால், எனக்குள் என்றென்றும்
உயிர்ப்புடன் உறங்கிக்கொண்டிருப்பாய்
நீ…!


கவிஞர்:கவிதை

No comments: