25 Sept 2010

இதயம்...













"இதயத்தை 
இரும்பாக தான் 
வைத்து இருந்தேன் … 
யாருக்கு தெரியும் 
காந்தமாக 
இருப்பான் என்று ...! "

எங்கே என் நட்பு...?













நட்பை எதிர்பார்த்து 

தனிமையில்
வருந்தி
கொண்டிருக்கும் போது
என் பக்கத்தில்
என்
செல்ல பூனை
என்னை
ஒரு பார்வை
பார்த்து விட்டு திரும்பியது
இன்று தான் அதற்க்கு
அர்த்தம் புரிந்து கொண்டேன்.... !
நானிருக்க உனக்கு
வேறோரு நட்பு தேவையா என்று...
வருந்துகிறேன்..
அந்த நட்பும்
இன்று இல்லை என்று ........


மறந்தவர்களுக்கு .....










மறந்தவர்களுக்கு
நினைவுகள் ஒரு பாலம்
மறுபடியும் சந்திக்க அல்ல
துவண்டு விடாமல் இருக்க

நினைக்க மறுப்பவர்களுக்கு
நிழல்கள் கூட தூரம் தான்
இவர்கள் சந்தித்தாலும்...

21 Sept 2010

கண்ணீரானது....!












உனக்காய்
காத்திருந்த போது
கால்கள் வலித்தன
அந்த நிமிடம்
கவிதை ஆனது!

இன்றோ
உனக்காய்
காத்திருக்கிறேன்!
இதயம் வலிக்கிறது
இந்த யுகங்கள்
கண்ணீரானது....!


மௌனம்

 


பக்கம் பக்கமாய்
பேச நினைக்கிறேன்...
ஆனாலும் நீ
பக்கத்தில் வரும்
போது முந்திக் கொள்கிறது ...

.........மௌனம்...............



உனது நட்பின் ஆழம்










எனது வெள்ளை காகிதங்களில்
கவிதைகளை நிரப்புவது
உன் நினைவுகள் மட்டுமே
வெறும் உறவென்றால்
மறந்து விடுவேன்
என் உயிர் துடிப்பதை
எவ்விதம் மறப்பேன்??
பிரிவு அது என்றுமே
நம்மில் தோற்று போகும்


உன்னை நிழலாய்
தொடர நினைக்கும்
என் நட்பு
உன் இதயம் தன்னில்
மறைந்து கொண்ட
சோகங்களை
தோண்டி எடுத்து
என்னுள் புதைத்து கொள்ள
விரும்புகிறது
நான் பார்க்க
நீயாவது புன்னகை அணிந்து கொள் ...!!!
பிரிவுக்காலம்
எப்போதும் அதில்
உன் நினைவுகளின் துணை
கொண்டு சிரித்துகொள்கிறேன்
இல்லை என்றால்
சிரிக்கவே மறந்திருப்பேன்


எனக்குள் வாழ்ந்து கொண்டு
எனக்காய் துடிக்கும்
உனது நட்பின் ஆழம்
கண்டு கண்ணீர் வடிக்கிறேன்
என் அருகில் நீ இல்லை என..!


எழுதியவர் :கார்த்திக் . 

17 Sept 2010

அடம் பிடிக்கிறது கண்கள்..














அழ வைப்பது 

அவன் தான் 

என்று தெரிந்தும்..

 அடம் பிடிக்கிறது கண்கள் 

அவனை தான் 

காண வேண்டும் என்று...

திரும்பிப்பார்க்காதே...



















காதலே..
மீண்டும் என்னை
திரும்பிப்பார்க்காதே..
இழப்பதற்கு இனி
என்னிடம்
எதுவும் இல்லை...

விலைமதிப்பில்லாத முத்துக்கள் ..















கடல் மணலில்
நம் காதலை
எழுதி வைத்தேன்..
அலை வந்து
அடித்துச்சென்ற போது
சொன்னது..
விலைமதிப்பில்லாத
முத்துக்கள்
எனக்கே சொந்தம் என்று......

15 Sept 2010

"எதிரில்" பார்க்க..










உன்னை "எதிரில்" பார்த்த
நாட்களை விட
"எதிர்" பார்த்த
நாட்கள் தான் அதிகம்..
இன்னும்
உன்னை நான்
"எதிர்" பார்க்கின்றேன்
"எதிரில்" பார்க்க..

என் இதயம்..!
















சூரியனை பார்க்காமல்
பூக்கள் மலர்வதில்லை..
அதுபோல்..
உன்னை நினைக்காமல்
என் இதயம்
துடிப்பதில்லை...

13 Sept 2010

தினம் தினம் தீக்குளிக்கின்றேன்!


















சீதை ...,
ஒரு தடவை தான்
தீக்குளித்தாள்...
ஆனால் நானோ...
நீ போடும் அட்சதைகளால்
தினம் தினம்
தீக்குளிக்கின்றேன்!

7 Sept 2010

அனைவரும் உறங்கும் நேரம் ....




















அனைவரும்
உறங்கும் நேரம்
எனக்கிது....
தலையணை.,
நனைக்கும் நேரம்....

6 Sept 2010

நான் .., மரித்துப்போகும் வரை,


















சொன்ன கவிதைகள்
சில ...
மனதோடு
மறைத்து வைத்த வரிகள்
பல....
என்னோடே போகட்டும்
அவை...
உனை
மறந்து போகும் வரை ..
நான் ..,
மரித்துப்போகும் வரை.

சுதந்திரப் பறவையும் நானும்..














சுதந்திரப் பறவையும்
நானும் ஒன்று ....
இருவருக்கும்..,
இருக்க நிலையான
இருக்கை இல்லை...

3 Sept 2010

இது தான் வாழ்க்கை...










ஒரு உயிர்
துடிக்கும் பொழுது...
யாரும்..,
கவனிக்க மாட்டார்கள்..
ஆனால்
நின்ற பிறகு...
எல்லாரும் துடிப்பார்கள்
இது தான் வாழ்க்கை...!

பிணமாய் அலைகின்றேன் ....




















உடலில்
உயிர் இருந்தும்
பிணமாய்
அலைகின்றேன்
என் அருகில்
நீ .....,
இல்லாததால்..

நீ இல்லாததால்..
















அன்று
கண்ணீர் கூட
சுகமானது துடைக்க
நீ இருந்ததால்..
இன்று
சிரிப்பு கூட
சுமையானது..
ஏனெனில்
சேர்ந்து சிரிக்க
நீ இல்லாததால்..

bY:-Viswa

நெஞ்சோடு உன் நினைவு...















என்னோடு நீ
இருந்தாலும் ...
இல்லை என்றாலும்
மண்ணோடு புதையும் வரை
நெஞ்சோடு வைத்திருப்பேன்...
உன் நினைவுகளை.!