26 Apr 2010

வலி வலியாகவே இருக்கிறது!












தெரிந்து மிதித்தாலும்
தெரியாமல் மிதித்தாலும்
வலியென்னவோ
ஒன்றாகத் தானிருக்கிறது!
தன் நாக்கைத்
தானே கடித்துக் கொள்வது!
தன் விரலே
கண்ணைக் குத்துவது!
தானே சண்டையிட்டு
நண்பியை பிரிவது!
எல்லாவற்றிலும்
அளவீடுகளின்றி
வலி வலியாகவே இருக்கிறது!

No comments: