
சத்தியங்கள் பல செய்து
பக்குவமாய் காய் நகர்த்தி..
காதல் நாடகம் நடத்தி..
ஒவ்வொரு வினாடியும்
என் மனப்பரப்பில்
உன் ஏக்கங்களை
விதைத்து...
சாமர்த்தியமாய் சம்மதம்
பெற்றாய்..
பல கோடி காலம் வாழலாம்
வா...! என பல தடவைகள் கூறி
காதல் பயின்றாய்...
என் இதய நாளங்களில்
காதல் சுவாசம் தந்து
என்னையும் உன் காதல்
மேகத்துக்குள்
மறைத்துக்கொண்டாயே...
ஏன்....?
No comments:
Post a Comment