
என்ன செய்ய ....
வாழ்க்கை வட்டத்தினுள் இருந்து
வெளியே வந்து சிந்தித்தாலும்....
மீண்டும் அடைபடும் நிலை...
வெகுதூரம் பறந்து செல்ல நினைக்கிறேன்.
இந்த போலியான உறவுகள்
போலியான மனிதர்களை விட்டு
வாழ்க்கை என்பதே தங்குமிடம் தானே
அதற்குள் எத்தனை தங்குமிடங்கள்..
யார் தான்....
இப்படி நடக்கும் என்று நினைத்தார்கள்...
படைக்கும் போதே........
இறைவனுக்கு தெரிந்திருந்தால் ...
இறைவன் இப்படிச் செய்திருக்க மாட்டான்..
இறைவனுக்கே...!
இன்று இவள் ஏமாறுவாள் என்று
அன்று தெரிந்திருக்கவில்லை போல்...
No comments:
Post a Comment