
இதயம் போராட்டத்திற்கான
தீர்விற்காய் ஆயுதங்களை
கீழே வைத்த வேளை - உனது
காலக்கேடு எனது
சாபக்கேடுகளாகின...
என் மனதிலுள்ள உனது
உருவம் மறையும் வேளையில்
கடிகார வினாடிக்கம்பம்
போல் ஊசலாடுகிறது
என் ஆத்மா...
இந் நிலைக்கு கடிவாளமிடவே
உனக்கு கரம் கூப்பினேன்...
அதற்கும் இணங்காது
காலக்கேடு தான் விதித்தாய்..
கருணையும்..
காதலும்...
உன் மனதிலிருந்து
எவ்வளவு தூரம்...
No comments:
Post a Comment