4 Jul 2012

வழக்கம் போல்.
















என் இரவுகளுக்கும்
உன் நினைவுகளுக்கும்
தூக்கமே இல்லை..
நடு இரவின் ஒத்திகைகளை
 சேமித்த வசனங்களை
 என்னால் ஒப்புவிக்க
முடியவில்லை..,
மௌனமாய் சிரித்து
வார்த்தைகளை ....
தொலைத்து நிற்பேன்
வழக்கம் போல்.

கண்கள்



Tears


என் கண்களை
நான் இழக்க மாட்டேன்
இந்த உயிர்
தத்தளிக்கும் போது
வழி சொல்வது
என் கண்கள்தான்.......

நீ



சின்னப் பிரிவிற்குள்
நீ
சிதைந்து போனதை
பார்த்தாயா....?

காதல் தேவதை

Photobucket

"உன் கால்களை
சுற்றி வந்த
காதல் தேவதை- இவள்
வேர்கள் காய்ந்து
 பூவுதிர்ந்து
கிடக்கிறாள்...!

காத்திருப்பேன்



"உன்னை
காணும் வரை....
 எந்நாளும்
எதிர்பார்த்து
விழி மூடாது
 காத்திருப்பேன்".