21 Apr 2010

துண்டித்து விட்டேன் உன்னுடைய தொடர்பை

















உன்னுடைய தொடர்பை
துண்டித்து விட்டேன்
துடித்தது என் இதயம்
துயரம் தாங்காமல்
விடியுமா நம் வாழ்வு
இப்படியே தொடர்ந்தால்...?
இதயத்தை கல்லாக்கவில்லை
மாறாக .. அது இன்று
இரத்த கண்ணீரை
உள்ளே வடிக்கிறது
வாய்திறந்து பேசவில்லை
வலிதாங்க முடியவில்லை
இந்நிலை நீடித்தால்
நீ தாங்கமாட்டாய்
உனக்காக தான் நான்
உணர்வுகளுக்கு திரையிட்டு
உடனே துண்டிகிறேன்
ஊமையாய் செல்கிறேன்
மன்னித்துவிடு...

No comments: