உயிரென்று...!
உன்னை நினைத்து
உருகுவதைவிட
உயிர் தந்தவர்களுக்காகவும்
உடன் பிறந்தவர்களுக்காகவும்..
எரியலாம்...
மெழுகுவர்த்தி போல் ...! ஆனாலும்,
உருகுவதை தவிர்க்கமுடியவில்லை.
அதுபோல்;
உன்னையும் மறக்கமுடியவில்லை..
என் வாழ்க்கையை
இரண்டாகப் பிரிக்கலாம்..
நான்
நானாக இருந்த
காலம் ஒன்று,
நான்
நீயாக மாறிய
காலம் மற்றொன்று.