13 Jul 2010

நீ.....!


உறங்க மனமில்லை

நினைவில் நீ...

உறங்கினால்

விழிக்க மனமில்லை

கனவில் நீ.....!

10 Jul 2010

நீ மட்டும்..


உலகின்
எந்த மூலைக்குப்
போனாலும் உன்னைப்
பார்த்துக் கொண்டே இருந்திருப்பேன்…
நீ மட்டும்
நிலவாகவே பிறந்திருந்தால்!

கைவிடப்பட்ட கவிதை...


தனிமையான சில கணங்களில்

இதயத்தின் நான்கு அறைகளிலிலும்

சூழ்ந்து கொள்ளும்

வெறுமையின் கனம்

தாங்க முடியாததாய் இருக்கிறது.
கனவுகளைத் தேடி உறக்கத்துக்கு

ஓடிய விழிகளும் கூட

இப்போதெல்லாம் வெறும்

நினைவுகளை சுமந்தபடி

விழித்திருப்….

....

...

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.


இப்படித்தான்…

முழுக்கவிதையும்

வாசிக்க நேர்ந்தால்,

என் துயர் தாங்க மாட்டாயென

பாதியிலேயே கைவிடப்படுகின்றன…

என் பல கவிதைகள்!

9 Jul 2010

நண்பா....,


நீ பறவை,

நான் மரம்

என்..,

கிளைகளை

காயப்படுத்திவிட்டு

உயர உயர

நீ பறப்பாய் .

காயப்பட்ட நானோ ,

கண்ணீருடன் ...!

எல்லைகளைத் தொட்டு

களைத்து...

என்றேனும்...!!!

திரும்பி வருவாய் இளைப்பாற

என்ற நம்பிக்கையில் ,

என் கிளைகள் எப்போதும் காத்திருக்கும்

உனக்காக ....


by: JeYa