
கனவுகளுடன் பிறந்தவள்
காயங்களுடன் வாழ்பவள்!
கற்பனைகளில் ஆறுதலடைந்தவள்
கலைந்ததும் தேறுதலாளவள்..!
அன்பை தேடியவள் - அதனால்,
தொலைந்து போனவள்..!
மழலையில் மகிழ்ந்தவள்
மங்கையானதும் மௌனித்தவள்!
ஆசைகளை விரட்டியவள்
நிராசைகளை வரவேற்றவள்..!
இயற்கைக்கு நிகரானவள்..
செயற்கைக்கு திரையானவள்!
வாழ்வில் பொலிவிழந்தவள்..!
காதலை நேசித்தவள்..
கவிதைகளை யாசித்தவள்!
கலகலப்பிற்கு ப்ரியப்பட்டவள்
அதனால்,
தனிமைக்குள் புகுந்தவள்..!
பிறர் மனதை மதித்தவள்
அதனால் ...,
மிதிக்கப்பட்டவள்!
நான்....
பிரகாசித்ததும்...
பின்னடைவோடு இருப்பவள்!
No comments:
Post a Comment