1 Jun 2010

இதயச் சிறையில்...!




பெண்ணே உன்னை
ஒவியமாக ஒப்பிட்டால்
பலரின் பார்வையில்
நீ பாதிப்படையலாம்...
பூவுடன் ஒப்பிட்டால்
மலர்வதும் மடிவதுமாக
நீ வாடிவிடலாம்...
நிலவுடன் ஒப்பிட்டால்
வளர்பிறை தேய்பிறையாய்
நீ துன்பப்படலாம்...
காற்றுடன் ஒப்பிட்டால்
சிலரின் செயலால்
நீ நச்சாகி விடலாம்...
புவியுடன் ஒப்பிட்டால்
இவ்வுலகின் தீயவர்களால்
நீ சுமைதாங்கியாகலாம்...
ஆகவே...
உன்னை என்
இதயச் சிறையில் பூட்டி
பாதுகாக்கிறேன்...!

-சுபஸ்ரீஸ்ரீராம்.

No comments: