1 Jun 2010

கனமில்லா கனவுகள்


தொடக்கம் ஆரவாரமாக

முடியும் ஆர்பாட்டமாக

இடைப்பட்ட வாழ்க்கை

பல இன்னல்களும்

சில இன்பங்களும் நிறைந்து ...

கடந்து வந்த பாதைகளை

கவலையோடு நினைத்து

எதிர் வரும் பாதைகளை

எதிபார்போடு எதிர்த்து

நிகழ்காலத்தை நினைவுகளில்

தொலைத்து கொண்டு

நிரந்திரம் இல்லாமல்

நித்திரை இல்ல்லாமல் ....

அத்தணையும் காற்றோடு

கரைத்துவிட்டு களிப்போடு

இருக்க கனமில்லா கனவுகளோடு

உலாவர ஒற்றை புன்னகை

உதிர்த்து செல்லுங்கள்

ஓராயிரம் அர்த்தங்கள்

புதைந்து இருக்கும்!

No comments: