2 Jun 2010

என் தனிமையில் இன்றும் நீ...!!




என் காதலை இந்த
பழாய்போன கண்கள்
காட்டிகொடுத்துவிடும்
என்பதாலே உன்னை நான்
அருகில் பார்ப்பதில்லை...
மனதில் பூத்தது எப்போதென்று
இன்று வரை அறியேன்
நான் … உன்
கண்ணீரை கண்டு
என் மனம் பதறிய போது
உணர்ந்தேன் நான்..
நீ என்னை
கடந்து செல்லும் பொழுது மட்டுமே
சுவாசித்திருகிறேன் பல சமயங்களில் …
தெரியாமல் படர்ந்த
உனது ஸ்பரிசத்தினால்
என் நிழலும் வெட்கப்பட்டு கண்டிருக்கிறேன் …
இரவில் பூமி சுழலும் சத்தத்தை
கேட்டிருகிறேன்
மறு நாள் உனை கான
நான் காத்திருக்கும்பொழுது…
காற்றில் தென்னங்கீற்று
பேசும் பாஷையை புரிந்து கொண்டேன்
உன் ரசனைகேற்ற வாழ்க்கை
வாழ பழகிகொண்டேன் ..ஆனால் ..
நீ வேறு பாதை தேடி கொண்டாய்…
நாட்கள் கடந்துவிட்டன..
உன்னை எனக்கு முழுதாக கற்றுகொடுத்த
என் தனிமையில் இன்றும்...
நீ வந்து சூழ்ந்துகொண்டுதான் இருக்கிறாய் ….!!!!!!!!!!!!

-VJ

No comments: