
நான் போக நினைத்தது
எங்கே ..!
இப்போது வந்து நிற்பது
தான் எங்கே..!
பாதையை என்
பாதங்கள் தீர்மானிக்கவில்லை..
காலம் தான் ..!
புன்னகை கிடைத்தது
இதழ்கள் பறிக்கப்பட்டது...
வெளிச்சம் கிடைத்தது..
விழிகள் அணைக்கப்பட்டது..
இன்று கிடைத்தது
நேற்று பறிபோய்விட்டது..
இவை என்னுள்
படிக்க முடியாத பக்கங்கள்..!