அமில உரமிட்டவன்
நீ...! எப்படி
எனை வீழ்த்துவது
என்று என்
நிழலாக தொடர்ந்தவன்
நீ...
ந்ல்லதொரு தோழனாய்
நடித்து பெரும்
நட்பு துரோகியானவன்
நீ...! தடையாகி எனை
தடுக்கி விழச்செய்தவன்
நீ.. என்னைப்
பழித்திட என்னுள்
இலட்சிய விதைகளை
திமிரோடு விதைத்தவன்
நீ..! என் முயற்சிகளுக்கு
முட்டுக்கட்டைகளை
வீசியவன் நீ..!
ஆயிரம் தீங்கிளைத்தாளும்
என்னை நான்
உணந்திட காரணமானவன்
நீ..!
ஆகையால் ...
ஜென்மம் அடுத்திருந்தால்
சந்திப்போம்....
சிறந்த விரோதியாக..
No comments:
Post a Comment