
புதையலைத் தேடிப்போய்
பூமியின் மடியில்
புதையல்களாகி
விட்டவர் போல்
என் மன
இரகசியத்தை
கண்டுபிடிக்க வந்து..! நீ
ஒரு இரகசியம் ஆகிவிடாதே...
என் "இதய சிலம்பை" எடுத்து
நான் உடைக்கும் போது...
நீ வேண்டாம் என்றே
விண்ணப்பித்துக்கொள்...
ஏனெனில்..,
உள்ளிருப்பது
என் முத்தல்ல..
மற்றவர் நினைவின்
மாணிக்கம் ,
எனத்தெரிந்தால்..
உன் மனம் தாங்காது.
By :ViswA
No comments:
Post a Comment