5 Jun 2010

இந்த உலகம்


மனம் என்பது கனமானது தான்..!

ஏனென்றால் காலத்தின்

ஓட்டப்பந்தயத்தில் அதைக்

கழற்றி வைத்தவர்கள் ...

வேகமாக முன்னேறி விரைந்து

கொண்டிருக்கிறார்கள் .. ஆனால்

உண்மையானவராய் வாழ்வபவர்களுக்கு

அடிக்கடி இந்த உலகம்

அபராதம் போடுகிறது...

பரவாயில்லை...

பொய்யின் தோள்களில் ஏறி

பூமியை சுற்றுவதைவிட..

உண்மையின் கைகளைப்

பிடித்துக்கொண்டு

உட்கார்ந்திருப்பது கூட

உத்தமமானது தான்.

No comments: