.gif)
பிரிவு என்பது
கண்ணீரின் கையொப்பம்..!
வானத்தை விட்டு
மேகம் பிரிகிறது
மழை என்ற கண்ணீருடன்..
மலைகளை விட்டு
அருவி பிரிகின்றது
நதி என்ற கண்ணீருடன்...
இசையை விட்டு
பாடல் பிரிகின்றது
ஸ்வரம் என்ற கண்ணீருடன்...
வாழ்க்கையை விட்டு
உயிர் பிரிகின்றது
மரணம் என்ற கண்ணீருடன்.
by :ShArU
No comments:
Post a Comment