கனவுகளை நச்சரித்துக்கொண்டு
நினைவுகளை சுமந்துகொண்டு
நான் கஷ்டப்படும் போது
ஆறுதல் சொல்ல
இங்கு ....
நீ இல்லை!
சில நினைவுகள்
நெஞ்சை அழுத்திய போது
கண்ணீரில் நீந்துவேன்
இதயத்தின் வலி உணர்ந்து
கவிதை எழுதும் பேனாவை விட
கண்ணீர் முந்திக்கொள்கிறது
எனது நினைவுகளுக்கு
நீந்தத்தெரியுமானால்...
வரும் உன்னிடம்!
No comments:
Post a Comment