
காலங்கள் கடந்தன
கணப்பொழுதினிலே!
ஆண்டுகள் கடந்தன
விதி வழியினிலே!
மணமான மலர்பாதையானது
இருமனம் சேர்ந்த
திருமண பயணம்!
உயிர் கலந்த உறவு இது
என்று உலகம் உணர
உதித்தது புதிய நிலா!
சோகங்களை புன்னகை
வென்றது!
சுமைகளை நம் இமைகள்
வென்றது!
போதாது இருவர்க்கும்
நூறாண்டுகள்!
வரமாக கேட்கிறேன்
இன்னும் நூறண்டுகள்!
நரை கூடிப்பழுத்தாலும்
உயிர் காதல் உதிராது!
வாழ்த்த வயதில்லை
கவிபாடுது சிறுநெஞ்சம்!
- ஈஸ்வரி
No comments:
Post a Comment