4 Jan 2010

நீ

தனிமையை உணர்கிறேன்
என்னை சுற்றி எல்லோரும்
இருந்தும்
நீ இல்லையே

ஒவ்வோரு அரிசியிலும் கூட
உரியவர் பெயராம்
அப்படி எனில் உன் உதட்டில்
என் பெயரா?

என் நினைவு தேக்கத்தை - நீ
நிறைத்துவிட்டாய்போல
புதிய நிகழ்வுகள் எதுவும்
நினைவில் நிலைப்பதில்லையே

நான் இழந்ததற்க்கும்
இழப்பதற்க்கும் ஈடு செய்பவ
ன் நீ தானே
என் உயிரின் உதிரமும் நீ
உதிரத்தின் உயிரும் நீ

கடந்துவந்த பாதைகளில்
மைல்கற்கல் அனைத்திலும் நீ
உன்னை நெருங்கியபோதும்
உன்னை விட்டு விலகியபோதும்

எனக்கான நிமிடங்களின்
எண்ணிக்கை குறைத்து
அதை
உனக்கான நிமிடமாக உயிர் கொடுத்தேன்
உயிர் வாழ உன் நினைவு போதும் என்றால்
மரணம் என்னிடத்தில்
மரணிக்கும்

எத்தனை முறை சொன்னார்கள்
காதல்
பசி அடக்கும்
ருசி அடக்கும்
கவிதைகள் வடிக்கும்
கனவுகள் படைக்கும்
உயிரை கறைக்கும்
உண்மை என்றேன்,
உன்னை கண்டபின்...

- தமிழ்மணி

No comments: