9 Jan 2010

கண்கள் கண்டதால்


உன்னையும் என்னையும்
படைத்தவன் இறைவன்....
அவனுக்கு எங்கே
போனது இதயம்....!

உன்னையும் என்னையும்
இணைப்பவன் எவனோ....
அவனுக்கு கொடுப்பேன்
என் இதயம்....!

விழிகளால் கவிதைகள்
வியப்பிலே மயங்கிப்
போனேன்....

வார்த்தைகள் ஒன்றும்
வரவில்லை
உன்னைப் பார்த்ததும்
ஊமையாகிப் போனேன்.....

உன் மனம்
என்னோடு;;
உனக்குப் புரியவில்லையா

உன் சுவாசக்காற்றில்
என்னை உன் உயிராய்
ஏற்றுக் கொள்வாயா.......

பாதையில் பார்த்த உறவு
பாசமாய்ப் போகவேண்டும்...
பயணமாய்த் தொடரும் இரவு
பந்தமாய்ப் போகவேண்டும்...

நீ... இல்லா நிணைவு
எனக்கு நரகம் ..
நீ... இல்லா வாழ்க்கை
எனக்கு மரணம் ..

No comments: