9 Jan 2010

விழி சிந்திய பனித்துளிகள்













காலங்கள் கடந்த பின்னும்
கால் தடங்கள் மாறாது
வேரூன்றி நிற்கிறது
மனதில் எழுந்த
தீராத நினைவுகள்

திறமைகள் பல இருந்தும்
பருவச் சுமைகளால்
தடம் மறைய நாட்கள்
தடம் மாறியே சென்றது

கற்க வேண்டிய கல்வியும்
வசதியான வாழ்வும்
புகழோடு கிடைத்தது
அகவை பல கடந்த பின் ...

வேதனை என்ற சொல்லுக்கு
அர்த்தம் ஒன்றைக் கண்டுபிடித்து
சோகம் என்ற சொல்லால்
சோதித்து
வரைவிலக்கணம் கொடுக்க
இயலாத வாழ்வினை
கவியினால் வடித்து
மற்றவர் முன்னிலையில்
அனுதாபம் அடைந்த
சுமையான நாட்களை எண்ணி
விழி சிந்தியது பனித்துளிகளை

புரண்டு படுக்கையில்
தொலைந்துபோன
தூக்கத்தை உணர்த்தியது
விழிகள்.........

மறக்க வேண்டிய நினைவுகள்
மறையாது மனதில் நின்றதால்
காரணங்கள் பல இருந்தும்
ஊமையானது வார்த்தைகள்

கடந்து வந்த
கசப்பான நாட்களை
கனவிலும் எண்ணாது
வாழ்க்கைக்கு உயிரூட்டி
புது உலகில் இவள்


பாரதி,
மண்டபம் முகாம்

No comments: