12 Feb 2010

விட்டில் பூச்சி











இது என்னில் இருந்து
தூரமாகிப் போன
உன்னை என்னி என்னி
என்னை நானே உருக்கி
ஒரு ஓரமாய் ஊமையாய்

ஓசையின்றி மௌனத்தால்
பேசும் பாஷைகள்
அவை என் காதலுக்கு
மட்டுமே உரிமையானவை

உன் வரவுக்காய் ஏங்கி நிற்கும்
என் நெஞ்சின் ஏக்கங்கள்

நானோ உன் நினைவுகளை
வட்டமிடும் விட்டில் பூச்சியாக
இங்கே
உன்னை எதிர்பார்த்து நிற்கின்றேன்!

No comments: