10 Feb 2010

நிறுத்தி விடு...

சூனியமாக இருந்த என் பாடலில்
சுருதி சேர்க்கப்பட்டது உன்னால் தான்
வெறுமனே வேதனைகளை
இசைத்துக் கொண்டிருந்த நான்
உன் வருகையால்
காதல் கானங்களை இசைக்கிறேன்...

வந்து போகும் என் காதலில்
உன்னிடம் ஒரு விண்ணப்பம்...

உன் மடி உறங்க ஒரு சந்தர்பம்
நிரந்தரமற்ற என் நின்மதிகளில்
நீயாவது நிரந்தரமாக தங்கிவிடு...

உனது வருகையும் உறுதியற்றது என்றால்
உன் மடி உறக்கத்தின் போது
எனது இறுதி மூச்சை உதிர்த்து
விடுகிறேன்...

No comments: