2 May 2010

உன் வரவால்











உன் காதலறிந்த கணத்தில்
என் பூமி பூக்களால் குலுங்கியது..
நீ பிரிந்தவேளை அதிர்வில்
என் உலகம் நடுங்கியது..
பிரிவைத் தயாரித்துக்கொண்டு தானே
காதலையே அறிவித்தாய்....?
நீ வந்து போன அடையாளமாய்
என் வீட்டில் உன் ஞாபக வெள்ளம்
தேங்கி நிற்கிறது...
உன் வரவால் - என் உயிரில்
கொஞ்சம் செலவழிந்து விட்டது...
இந்த உறவின் மிசசம்
சொல்லக்கூடாத சில நினைவுகளும்..
சொல்லக்கூடிய ஒரு கவிதையும் தான்...

No comments: