தனிமையில்
வருந்தி
கொண்டிருக்கும் போது
என் பக்கத்தில்
என்
செல்ல பூனை
என்னை
ஒரு பார்வை
பார்த்து விட்டு திரும்பியது
இன்று தான் அதற்க்கு
அர்த்தம் புரிந்து கொண்டேன்.... !
நானிருக்க உனக்கு
வேறோரு நட்பு தேவையா என்று...
வருந்துகிறேன்..
அந்த நட்பும்
இன்று இல்லை என்று ........
எனது வெள்ளை காகிதங்களில்
கவிதைகளை நிரப்புவது
உன் நினைவுகள் மட்டுமே
வெறும் உறவென்றால்
மறந்து விடுவேன்
என் உயிர் துடிப்பதை
எவ்விதம் மறப்பேன்??
பிரிவு அது என்றுமே
நம்மில் தோற்று போகும்
உன்னை நிழலாய்
தொடர நினைக்கும்
என் நட்பு
உன் இதயம் தன்னில்
மறைந்து கொண்ட
சோகங்களை
தோண்டி எடுத்து
என்னுள் புதைத்து கொள்ள
விரும்புகிறது
நான் பார்க்க
நீயாவது புன்னகை அணிந்து கொள் ...!!!
பிரிவுக்காலம்
எப்போதும் அதில்
உன் நினைவுகளின் துணை
கொண்டு சிரித்துகொள்கிறேன்
இல்லை என்றால்
சிரிக்கவே மறந்திருப்பேன்
எனக்குள் வாழ்ந்து கொண்டு
எனக்காய் துடிக்கும்
உனது நட்பின் ஆழம்
கண்டு கண்ணீர் வடிக்கிறேன்
என் அருகில் நீ இல்லை என..!