10 Jul 2010

கைவிடப்பட்ட கவிதை...


தனிமையான சில கணங்களில்

இதயத்தின் நான்கு அறைகளிலிலும்

சூழ்ந்து கொள்ளும்

வெறுமையின் கனம்

தாங்க முடியாததாய் இருக்கிறது.
கனவுகளைத் தேடி உறக்கத்துக்கு

ஓடிய விழிகளும் கூட

இப்போதெல்லாம் வெறும்

நினைவுகளை சுமந்தபடி

விழித்திருப்….

....

...

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.


இப்படித்தான்…

முழுக்கவிதையும்

வாசிக்க நேர்ந்தால்,

என் துயர் தாங்க மாட்டாயென

பாதியிலேயே கைவிடப்படுகின்றன…

என் பல கவிதைகள்!