
நீ பறவை,
நான் மரம்
என்..,
கிளைகளை
காயப்படுத்திவிட்டு
உயர உயர
நீ பறப்பாய் .
காயப்பட்ட நானோ ,
கண்ணீருடன் ...!
எல்லைகளைத் தொட்டு
களைத்து...
என்றேனும்...!!!
திரும்பி வருவாய் இளைப்பாற
என்ற நம்பிக்கையில் ,
என் கிளைகள் எப்போதும் காத்திருக்கும்
உனக்காக ....
by: JeYa