
தனிமையான சில கணங்களில்
இதயத்தின் நான்கு அறைகளிலிலும்
சூழ்ந்து கொள்ளும்
வெறுமையின் கனம்
தாங்க முடியாததாய் இருக்கிறது.
கனவுகளைத் தேடி உறக்கத்துக்கு
ஓடிய விழிகளும் கூட
இப்போதெல்லாம் வெறும்
நினைவுகளை சுமந்தபடி
விழித்திருப்….
....
...
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
இப்படித்தான்…
முழுக்கவிதையும்
வாசிக்க நேர்ந்தால்,
என் துயர் தாங்க மாட்டாயென
பாதியிலேயே கைவிடப்படுகின்றன…
என் பல கவிதைகள்!