18 Mar 2010

உன்னை பார்த்த போது

என் சந்தோச நாட்களில் நான் சிரித்திருந்த போது
என்னைச் சுற்றி பல சிரிப்பொலிகள்.
எனக்காய் இத்தனை பேர் என்று பூரித்திருந்தேன்.
சோகத்தில் நான் துவண்டு அழுத
என்னைச் சுற்றி சில அழுகுரல்கள்
அப்போது
விழியோர நீர் துளியுடன் நீயும் நின்றாய்
அந்த சோகத்தில் கூட சுகமான
மகிழ்வு கிடைத்தது உன்னை பார்த்த போது.

No comments: