நினைவூட்டியபடி விழுகின்றன...நான் தவறவிட்ட தருணங்கள்!!
என் பாதியில் நீ நிறையவும் உன் பாதியில் நான் நிறையவும் வினாடித்துகள் ஒன்று போதுமே
29 Jun 2010
இன்று.....
நான்
நேசித்த இதயத்தில்
இன்று.....
என்னையோசிக்க
வைத்த இதயம் - நீ
20 Jun 2010
தயங்கினேன்...
விலகி போவாயோ
என்று பயந்தே
காதலை சொல்ல
தயங்கினேன்...
காதலை சொல்ல
தயங்கியதாலே..
நீ விலகி
போவாய்
என்று
தெரியாது...
எதுக்கு ...!
தாய் இல்லாமல்
பாசம் எதுக்கு
வலிகள் இல்லாமல்
சாதனை எதுக்கு
கண் இல்லாமல்
கண்ணீர் எதுக்கு ...
இரவில்லாமல்
பகல் எதுக்கு
காற்று இல்லாமல்
உயிர் எதுக்கு
சூரியன் இல்லாமல்
நிலா எதுக்கு
கண் இல்லாமல்
கண்ணீர் எதுக்கு
சோகம் இல்லாமல்
சோதனை எதுக்கு
இதை எல்லாம்
உருவாக்கியவனை
மறந்த வாழ்கை எதுக்கு ...!
ஏனோ... ?
கதறி அழும் குழந்தை,
பாத்திரம் நிறைய
பால் இருந்தும்...
குடிக்க வைக்க
பால்புட்டி இல்லை,
பதறி துடிக்கும்
என் நெஞ்சு
ஆயுள் முழுதும்
காதலிக்க நீ இருந்தும்
ஏனோ... ?
குழந்தை மனசு...
சிரித்தால் சிரிக்க
தோன்றும்
கோபப்பட்டாலும்
சிரிக்க தோன்றும்
மிரட்டினாலும்
சிரிக்க தோன்றும்...
அழும் போதும்
சிரிக்க தோன்றும்
விட்டு சென்றால் மட்டுமே
அழ தோன்றும்
குழந்தை மனசு.
இவை அனைத்தும்
என் காதலிலும் உணரப்பட்டது..
தெரியவில்லை...
அணுவணுவாய்
ரசிக்கிறேன்..
அனுதினம் சாகிறேன்..
அணுவை பிளக்கும்
சக்தி இருந்தும்....
அவள் இதயத்தை பிளக்க
தெரியவில்லை..
16 Jun 2010
இதுவரை...,
காதல் தோல்வியின்
சின்னம்"தாஜ்மஹால்"
வெற்றியின் சின்னம்
இதுவரை இல்லை!!
ஜெய்த்தவன் காதலை
மதிப்பதில்லை..
தோற்றவன் காதலை
மறப்பதில்லை...
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)