"
இதயத்தை
இரும்பாக தான்
வைத்து இருந்தேன் …
யாருக்கு தெரியும்
காந்தமாக
இருப்பான் என்று ...! "
நட்பை எதிர்பார்த்து
தனிமையில்
வருந்தி
கொண்டிருக்கும் போது
என் பக்கத்தில்
என்
செல்ல பூனை
என்னை
ஒரு பார்வை
பார்த்து விட்டு திரும்பியது
இன்று தான் அதற்க்கு
அர்த்தம் புரிந்து கொண்டேன்.... !
நானிருக்க உனக்கு
வேறோரு நட்பு தேவையா என்று...
வருந்துகிறேன்..
அந்த நட்பும்
இன்று இல்லை என்று ........
மறந்தவர்களுக்கு
நினைவுகள் ஒரு பாலம்
மறுபடியும் சந்திக்க அல்ல
துவண்டு விடாமல் இருக்க
நினைக்க மறுப்பவர்களுக்கு
நிழல்கள் கூட தூரம் தான்
இவர்கள் சந்தித்தாலும்...
உனக்காய்
காத்திருந்த போது
கால்கள் வலித்தன
அந்த நிமிடம்
கவிதை ஆனது!
இன்றோ
உனக்காய்
காத்திருக்கிறேன்!
இதயம் வலிக்கிறது
இந்த யுகங்கள்
கண்ணீரானது....!

பக்கம் பக்கமாய்
பேச நினைக்கிறேன்...
ஆனாலும் நீ
பக்கத்தில் வரும்
போது முந்திக் கொள்கிறது ...
.........மௌனம்...............
எனது வெள்ளை காகிதங்களில்
கவிதைகளை நிரப்புவது
உன் நினைவுகள் மட்டுமே
வெறும் உறவென்றால்
மறந்து விடுவேன்
என் உயிர் துடிப்பதை
எவ்விதம் மறப்பேன்??
பிரிவு அது என்றுமே
நம்மில் தோற்று போகும்
உன்னை நிழலாய்
தொடர நினைக்கும்
என் நட்பு
உன் இதயம் தன்னில்
மறைந்து கொண்ட
சோகங்களை
தோண்டி எடுத்து
என்னுள் புதைத்து கொள்ள
விரும்புகிறது
நான் பார்க்க
நீயாவது புன்னகை அணிந்து கொள் ...!!!
பிரிவுக்காலம்
எப்போதும் அதில்
உன் நினைவுகளின் துணை
கொண்டு சிரித்துகொள்கிறேன்
இல்லை என்றால்
சிரிக்கவே மறந்திருப்பேன்
எனக்குள் வாழ்ந்து கொண்டு
எனக்காய் துடிக்கும்
உனது நட்பின் ஆழம்
கண்டு கண்ணீர் வடிக்கிறேன்
என் அருகில் நீ இல்லை என..!
எழுதியவர் :கார்த்திக் .
அழ வைப்பது
அவன் தான்
என்று தெரிந்தும்..
அடம் பிடிக்கிறது கண்கள்
அவனை தான்
காண வேண்டும் என்று...