நினைவூட்டியபடி விழுகின்றன...நான் தவறவிட்ட தருணங்கள்!!
என் பாதியில் நீ நிறையவும் உன் பாதியில் நான் நிறையவும் வினாடித்துகள் ஒன்று போதுமே
17 Sept 2010
திரும்பிப்பார்க்காதே...
காதலே..
மீண்டும் என்னை
திரும்பிப்பார்க்காதே..
இழப்பதற்கு இனி
என்னிடம்
எதுவும் இல்லை...
விலைமதிப்பில்லாத முத்துக்கள் ..
கடல் மணலில்
நம் காதலை
எழுதி வைத்தேன்..
அலை வந்து
அடித்துச்சென்ற போது
சொன்னது..
விலைமதிப்பில்லாத
முத்துக்கள்
எனக்கே சொந்தம் என்று......
15 Sept 2010
"எதிரில்" பார்க்க..
உன்னை "எதிரில்" பார்த்த
நாட்களை விட
"எதிர்" பார்த்த
நாட்கள் தான் அதிகம்..
இன்னும்
உன்னை நான்
"எதிர்" பார்க்கின்றேன்
"எதிரில்" பார்க்க..
என் இதயம்..!
சூரியனை பார்க்காமல்
பூக்கள் மலர்வதில்லை..
அதுபோல்..
உன்னை நினைக்காமல்
என் இதயம்
துடிப்பதில்லை...
13 Sept 2010
தினம் தினம் தீக்குளிக்கின்றேன்!
சீதை ...,
ஒரு தடவை தான்
தீக்குளித்தாள்...
ஆனால் நானோ...
நீ போடும் அட்சதைகளால்
தினம் தினம்
தீக்குளிக்கின்றேன்!
7 Sept 2010
அனைவரும் உறங்கும் நேரம் ....
அனைவரும்
உறங்கும் நேரம்
எனக்கிது....
தலையணை.,
நனைக்கும் நேரம்....
6 Sept 2010
நான் .., மரித்துப்போகும் வரை,
சொன்ன கவிதைகள்
சில ...
மனதோடு
மறைத்து வைத்த வரிகள்
பல....
என்னோடே போகட்டு
ம்
அவை...
உனை
மறந்து போகும் வரை ..
நான் ..,
மரித்துப்போகும் வரை.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)