6 Sept 2010

சுதந்திரப் பறவையும் நானும்..














சுதந்திரப் பறவையும்
நானும் ஒன்று ....
இருவருக்கும்..,
இருக்க நிலையான
இருக்கை இல்லை...

3 Sept 2010

இது தான் வாழ்க்கை...










ஒரு உயிர்
துடிக்கும் பொழுது...
யாரும்..,
கவனிக்க மாட்டார்கள்..
ஆனால்
நின்ற பிறகு...
எல்லாரும் துடிப்பார்கள்
இது தான் வாழ்க்கை...!

பிணமாய் அலைகின்றேன் ....




















உடலில்
உயிர் இருந்தும்
பிணமாய்
அலைகின்றேன்
என் அருகில்
நீ .....,
இல்லாததால்..

நீ இல்லாததால்..
















அன்று
கண்ணீர் கூட
சுகமானது துடைக்க
நீ இருந்ததால்..
இன்று
சிரிப்பு கூட
சுமையானது..
ஏனெனில்
சேர்ந்து சிரிக்க
நீ இல்லாததால்..

bY:-Viswa

நெஞ்சோடு உன் நினைவு...















என்னோடு நீ
இருந்தாலும் ...
இல்லை என்றாலும்
மண்ணோடு புதையும் வரை
நெஞ்சோடு வைத்திருப்பேன்...
உன் நினைவுகளை.!

25 Aug 2010

உன் கடைசி நேரப்பார்வைக்காய்...









இப்போது என் இதயம் கூட
இயங்கவில்லை - உன்
கண்பார்வை படாமல்...
விழிகள் வீசி வீசி
எனை கொன்ற காலங்கள் போக
உன் பிரிவில் .....
இன்று என் உயிர் பிரியும் நேரத்தில்
உன் ஓரவிழிப்பார்வை கூட கிடைக்காதா....!
என் வலிகள் கூட எனைப்பார்த்து சிரிக்கின்றன...
உனைபார்த்து கண்ணீர் சிந்த ஒரு கண்கள் இல்லையே என்று..
காத்திருக்கின்றேன் உன் கடைசி நேரப்பார்வைக்காய்...

by:- MirUn

இதயபூக்கள்....,

உன் இதயத்தை
பூக்களுடன் கொடுக்கும் போது...
எனக்கு தெரியவில்லை..
அந்த பூக்களின் அடியிலும்
முட்கள் வளர்ந்து கொண்டிருந்ததை.....





by:- MiRuN