என் பாதியில் நீ நிறையவும் உன் பாதியில் நான் நிறையவும் வினாடித்துகள் ஒன்று போதுமே
4 Jul 2012
27 May 2011
21 May 2011
14 Jan 2011
மன்னித்து விடு
5 Jan 2011
25 Dec 2010
உறவுகளின் தவிர்ப்பு....
தனிமையாய் இருந்திருந்தால்
தவிர்ப்புக்கள் குறைந்திருக்கும்..
உறவுகளின் தவிர்ப்புக்களால்
சிதைந்து போகிறது - இவள் எண்ணங்கள்
உன் நினைவுகள் - எனை
அழிப்பது ஒரு புறமிருக்க ..
என்னை சுற்றி இருப்பவர்களினது
சுட்டெரிக்கும் வார்த்தைகளும்
எனை சுடுகாடு வரை செல்ல
தூண்டுகின்றது..
வாழ்க்கை என்னை
உன்னுடன் வாழ விடவில்லை..
இன்று உன்.....
நினைவுகளுடனும்
வாழவிடுவாதாய் இல்லை..
இன்று.......
தோற்றுபோனது... என்
காதல் மட்டுமல்ல..
என் தன்னம்பிக்கையும் தான்..
மன்னித்துவிடு - நீ இன்றி
வாழ்ந்து கொண்டிருக்கும்..
ஒவ்வொரு விநாடியும்..
என்மேல் எரிமலைத்துகள்கள் தான்
வந்து விழுந்த வண்ணம் இருக்கின்றன..
இங்கு மனிதர்கள் மட்டுமல்ல
மனித நேயங்களும் தான்
கொலைசெய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றன..
7 Dec 2010
தவறு..
அறியாமல் நீ செய்த தவறு..
உன் காதலைப்பற்றி
என்னிடம் தெரிவித்தது..
அறிந்தே நான் செய்த தவறு
உன் காதலால் - என்
காதலை வெறுத்தது..
காரணம் நம் காதலன் ஒருவனே...
இன்று
அவன் தான் என்னுடன்
இல்லையே தவிர- அவன்
நினைவுகள் என்றும் என்னுடன்..
29 Nov 2010
நட்பு.
காத்திருக்கிறேன்...
25 Nov 2010
கனவு....
கனவுக்குள் சுமந்தவனை...
கனவோடு தொலைத்து..
தவித்த இவள் இதயத்தை ...
உருமாற்றியவனையும்
எங்கோ ...!
தவற விட்டு தவிப்பவளை
என்னவென்று சொல்ல...?
bY: ShArU
14 Nov 2010
நிஜமான கற்பனை…
எத்தனையோ பேர் வந்து போகையிலும்
தங்கிப்போகையிலும்
அமைதியாய் இருந்த என் இல்லம்…
தங்கிப்போகையிலும்
அமைதியாய் இருந்த என் இல்லம்…
நான் தனிமையில் இருக்கையில் மட்டும்
என்றோ நீ என்னுடன் இருந்த
என்னருகில் அமர்ந்த
காட்சிகளை எல்லாம்
கண்முன்னே அரங்கேற்றுகிறது !
என்றோ நீ என்னுடன் இருந்த
என்னருகில் அமர்ந்த
காட்சிகளை எல்லாம்
கண்முன்னே அரங்கேற்றுகிறது !
என் அறைகள் முழுவதும்
நிறையும் உன் வாசத்தை
நினைவுகளில் சுமந்தபடியே
அமர்ந்திருக்கிறேன்
அசைவுகள் ஏதுமின்றி !
நிறையும் உன் வாசத்தை
நினைவுகளில் சுமந்தபடியே
அமர்ந்திருக்கிறேன்
அசைவுகள் ஏதுமின்றி !
அடிக்கடி எனக்கு மட்டும்
கேட்கின்ற உன் சிரிப்பு சத்தங்களும்
நீ அன்போடு என்னை அழைக்கும் அந்த சத்தமும்
இப்பொழுதெல்லாம் எனக்கு பழகிவிட்டது !
கேட்கின்ற உன் சிரிப்பு சத்தங்களும்
நீ அன்போடு என்னை அழைக்கும் அந்த சத்தமும்
இப்பொழுதெல்லாம் எனக்கு பழகிவிட்டது !
ஒருவேளை நீ நிஜத்தில்
என் முன் வந்து நின்றாலும்
பேசினாலும்கூட
இதுவும் கற்பனை என்று
நான் உன்னை கடந்துபோகக்கூடும்
எச்சரிக்கையாய் இரு…
என் முன் வந்து நின்றாலும்
பேசினாலும்கூட
இதுவும் கற்பனை என்று
நான் உன்னை கடந்துபோகக்கூடும்
எச்சரிக்கையாய் இரு…
by: piRiyan
29 Oct 2010
கலைந்து போனது...
அன்று
கருவோடு.... - என்
காதல் கலைந்து போனது..
இன்று
உயிரோடு கலந்து
உறைந்து போகின்றதே..
என்...,
காதலை சுமக்க - நான்
என்ன தாய்மை அற்றவளா..?
இல்லை தகுதி அற்றவளா..?
by:- ShaRu
27 Oct 2010
என்னை ஆசீர்வதி....
நான்
எரிமலையிலிருந்து தான்
தோன்றியிருக்க வேண்டும்
ஆம்... ! அப்படித்தான் இருக்கும்..
இல்லையேல்..?
எனக்குள் இருக்கும் நெருப்பு
எப்படி வந்தது..?
யார் காலில் மிதிபடவும் தயாரில்லாமல்..
எனை எவரும் வேரோடு
பிடுங்கி எறிய அனுமதியாமலும்...
நான் செய்யும்
போரின் வேர் உன்னுடையது தானே..!
உரிமைப்போரில்
உன் காதல் தோற்றுப்போகாதிருக்க ..
எந்த வேளையிலும்
உன்னை இழக்காமலிருக்க ..
என்னை ஆசீர்வதி..
Subscribe to:
Posts (Atom)












