4 Jul 2012

வழக்கம் போல்.
















என் இரவுகளுக்கும்
உன் நினைவுகளுக்கும்
தூக்கமே இல்லை..
நடு இரவின் ஒத்திகைகளை
 சேமித்த வசனங்களை
 என்னால் ஒப்புவிக்க
முடியவில்லை..,
மௌனமாய் சிரித்து
வார்த்தைகளை ....
தொலைத்து நிற்பேன்
வழக்கம் போல்.

கண்கள்



Tears


என் கண்களை
நான் இழக்க மாட்டேன்
இந்த உயிர்
தத்தளிக்கும் போது
வழி சொல்வது
என் கண்கள்தான்.......

நீ



சின்னப் பிரிவிற்குள்
நீ
சிதைந்து போனதை
பார்த்தாயா....?

காதல் தேவதை

Photobucket

"உன் கால்களை
சுற்றி வந்த
காதல் தேவதை- இவள்
வேர்கள் காய்ந்து
 பூவுதிர்ந்து
கிடக்கிறாள்...!

காத்திருப்பேன்



"உன்னை
காணும் வரை....
 எந்நாளும்
எதிர்பார்த்து
விழி மூடாது
 காத்திருப்பேன்".

27 May 2011

மெழுகுவர்த்தி போல் ...!













உயிரென்று...!
உன்னை நினைத்து 
உருகுவதைவிட
உயிர் தந்தவர்களுக்காகவும்
உடன் பிறந்தவர்களுக்காகவும்.. 

எரியலாம்...
மெழுகுவர்த்தி போல் ...! ஆனாலும்,
உருகுவதை தவிர்க்கமுடியவில்லை.
அதுபோல்; 

உன்னையும் மறக்கமுடியவில்லை..

21 May 2011

நான் நீயாக


Will you Be Mine
என் வாழ்க்கையை
இரண்டாகப் பிரிக்கலாம்..
நான்

நானாக இருந்த 
காலம் ஒன்று,
நான் 

நீயாக மாறிய
காலம் மற்றொன்று.

14 Jan 2011

மன்னித்து விடு

sad girl

உன்னைக் 
காயப்படுத்தியது
நான் மட்டுமல்ல ...
என் ..
கவிதைகளும் தான்.. 
மன்னித்து விடு ..
நம் இருவரையும்.


By: SHaru

தரிசனம் இன்றி..













என்
கவிதைகள்
கூட ...
விதவையாகிவிட்டது
உன் ...
கண்களின்
தரிசனம்
இன்றி..

By: SharU

25 Dec 2010

உன்னால்...?

உறவுகளின் தவிர்ப்பு....










தனிமையாய் இருந்திருந்தால்
தவிர்ப்புக்கள் குறைந்திருக்கும்..
உறவுகளின் தவிர்ப்புக்களால்
சிதைந்து போகிறது - இவள் எண்ணங்கள்
உன் நினைவுகள் - எனை
அழிப்பது ஒரு புறமிருக்க ..
என்னை சுற்றி இருப்பவர்களினது
சுட்டெரிக்கும் வார்த்தைகளும்
எனை சுடுகாடு வரை செல்ல
தூண்டுகின்றது..
வாழ்க்கை  என்னை
உன்னுடன் வாழ விடவில்லை..
இன்று உன்.....
 நினைவுகளுடனும்
வாழவிடுவாதாய் இல்லை..
இன்று.......
தோற்றுபோனது... என்
காதல் மட்டுமல்ல..
என் தன்னம்பிக்கையும் தான்..
மன்னித்துவிடு - நீ இன்றி
வாழ்ந்து கொண்டிருக்கும்..
ஒவ்வொரு விநாடியும்..
என்மேல் எரிமலைத்துகள்கள் தான்
வந்து விழுந்த வண்ணம் இருக்கின்றன..
இங்கு மனிதர்கள் மட்டுமல்ல
மனித நேயங்களும் தான்
கொலைசெய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றன..

7 Dec 2010

தவறு..


அறியாமல் நீ செய்த தவறு.. 
உன் காதலைப்பற்றி
 என்னிடம் தெரிவித்தது..
அறிந்தே நான் செய்த தவறு
உன் காதலால் - என் 
காதலை வெறுத்தது..
காரணம் நம் காதலன் ஒருவனே...
இன்று  
அவன் தான் என்னுடன் 
இல்லையே தவிர- அவன் 
நினைவுகள் என்றும் என்னுடன்..


29 Nov 2010

நட்பு.

Friend

காதல் என்பதை தவறாக
உணர்ந்துகொண்டேன்
இது காதலனிடம் மட்டுமே
வரும் என்று !!!
என் நண்பர்களை பார்த்த பின் தான்
தெரிந்தது
அது நட்பின் மறு
பெயர் என்று !!!!!

காத்திருக்கிறேன்...

1978784qfev7gqazs.gif

உனக்காக காத்திருக்கிறேன் ..
கனவாகிப் போனது - என்
 எண்ணங்கள் மட்டுமல்ல ..
 காலங்களும் தான்..
இன்றும் காத்திருக்கிறேன். ...!
என் காத்திருப்பில்..
சந்திக்கின்றேன் பலரை..
சந்திக்க விரும்பிய..,
உன்னைத்தவிர..
அனைவரையும்.


By : ShAru

25 Nov 2010

கவிதையுடனான பந்தம்


உன் உணர்வுகளை 

இந்தச் சமூகம் 

புரிந்து கொள்ளாமல்

காயப்படுத்திவிடும் 

என்கிற தவிப்பினால் 

நிறுத்திவிட்டாயோ 

கவிதையுடனான 

உன் பந்தத்தை........?


கனவு....









கனவுக்குள் சுமந்தவனை...
கனவோடு தொலைத்து..
தவித்த  இவள் இதயத்தை ...
உருமாற்றியவனையும்
எங்கோ ...!
தவற விட்டு தவிப்பவளை
என்னவென்று சொல்ல...?

bY: ShArU

14 Nov 2010

நிஜமான கற்பனை…












எத்தனையோ பேர் வந்து போகையிலும்
தங்கிப்போகையிலும்
அமைதியாய் இருந்த என் இல்லம்…

நான் தனிமையில் இருக்கையில் மட்டும்
என்றோ நீ என்னுடன் இருந்த
என்னருகில் அமர்ந்த
காட்சிகளை எல்லாம்
கண்முன்னே அரங்கேற்றுகிறது !

என் அறைகள் முழுவதும்
நிறையும் உன் வாசத்தை
நினைவுகளில் சுமந்தபடியே
அமர்ந்திருக்கிறேன்
அசைவுகள் ஏதுமின்றி  !

அடிக்கடி எனக்கு மட்டும்
கேட்கின்ற உன் சிரிப்பு சத்தங்களும்
நீ அன்போடு என்னை அழைக்கும் அந்த சத்தமும்
இப்பொழுதெல்லாம் எனக்கு பழகிவிட்டது !

ஒருவேளை நீ நிஜத்தில்
என் முன் வந்து நின்றாலும்
பேசினாலும்கூட
இதுவும் கற்பனை என்று
நான் உன்னை கடந்துபோகக்கூடும்
எச்சரிக்கையாய் இரு…

by: piRiyan

29 Oct 2010

கலைந்து போனது...













அன்று 
கருவோடு.... - என்
காதல் கலைந்து போனது.. 
இன்று 
உயிரோடு கலந்து
உறைந்து போகின்றதே..
என்...,
காதலை சுமக்க -  நான் 
என்ன தாய்மை அற்றவளா..?
இல்லை தகுதி அற்றவளா..?


by:- ShaRu

27 Oct 2010

என்னை ஆசீர்வதி....














நான் 
எரிமலையிலிருந்து தான் 
தோன்றியிருக்க  வேண்டும் 
ஆம்... ! அப்படித்தான் இருக்கும்..
இல்லையேல்..?
எனக்குள் இருக்கும் நெருப்பு 
எப்படி வந்தது..?
யார் காலில் மிதிபடவும் தயாரில்லாமல்..
எனை எவரும் வேரோடு 
பிடுங்கி எறிய அனுமதியாமலும்...
நான் செய்யும் 
போரின் வேர் உன்னுடையது தானே..! 
உரிமைப்போரில் 
உன் காதல் தோற்றுப்போகாதிருக்க ..
எந்த வேளையிலும் 
உன்னை இழக்காமலிருக்க ..
என்னை ஆசீர்வதி..